கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்தனர் பெண் உயிரிழப்பு

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்தனர் பெண் உயிரிழப்பு
X

சைலஜா வயது(56) 

குலசேகரம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்த நிலையில் பெண் ஒருவர் உயிரிழப்பு.
குலசேகரம் அருகே பொன்னுமங்கலத்து வீடு, மாமூடு பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார் வயது(65) இவரது மனைவி சைலஜா வயது(56) இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர் மூத்த மகன் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் இளைய மகன் சுரப்ஜித் வயது (26) வீட்டில் இருந்து ஐடி கம்பெனி வேலை பார்த்து வருகிறார் இவர்களுக்கு சுமார் 2 கோடி வரை கடன் இருக்கிறது இந்த கடனை அடைப்பதற்காக வெளியூரில் வேலை பார்க்கும் மூத்த மகனிடம் கேட்டுயிருக்கிறார் அவர் கொடுக்கவில்லை இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அஜித்குமார் அவரது மனைவி மகன் ஆகியோர் மூத்த மகனிடம் பணம் கேட்டுள்ளார் அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.உடனே மனம் உடைந்து விஷம் குடித்தனர்.காலையில் வீட்டு வேலைக்கு வந்தவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உடனே குலசேகரம் தீயணைப்பு நிலையத்து தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து பூட்டை உடைத்து மூன்று பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது மனைவி சைலஜா இறந்தது தெரிய வந்தது இது சம்மந்தமாக குலசேகரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்

Tags

Next Story