இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் படுகாயம்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் படுகாயம்
X

விபத்து 

நத்தம் அருகேயுள்ள பாப்பாபட்டி பிரிவில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் விவசாயி படுகாயமடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பாப்பாபட்டி சேர்ந்தவர் சங்கிலி மகன் கனகராஜ் (வயது 50). விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காயை மூட்டை கட்டி வழக்கம் போல் நத்தம் சந்தையில் விற்பனை செய்வதற்காக அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்துள்ளார்.

அப்போது பாப்பாபட்டி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கனகராஜ் பலத்த காயமடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கனகராஜை மீட்டு அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து தொடர்பாக நத்தம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story