வேலூர்: சாராயம் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது

வேலூர்: சாராயம் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
X

 சாராயம் விற்பனை செய்த வாலிபரை விரிஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

சாராயம் விற்பனை செய்த வாலிபரை விரிஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
விரிஞ்சிபுரம் போலீசார் வேலூரை அடுத்த குடிசை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மலை அடிவாரத்தில் லாரி டியூப்பில் வாலிபர் ஒருவர் சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் அணைக்கட்டு தாலுகா ஆட்டுக்காரன்துறையை சேர்ந்த வெள்ளையன் மகன் முருகன் (20) என்றும், விற்பனைக்காக சாராயத்தை வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து முருகனை, போலீசார் கைது செய்து,30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story