''அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்துவிட்டு முதலைக்கண்ணீர் வடிக்கிறார் மு.க.ஸ்டாலின்'' - எடப்பாடி பழனிசாமி !

அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்துவிட்டு முதலைக்கண்ணீர் வடிக்கிறார் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி !
X

எடப்பாடி பழனிசாமி 

சென்னை அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 19) ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்துவிட்டு தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில் 19 உணவகங்களை மூடியது ஏன்?

தமிழகத்தின் அன்னலட்சுமியாக செயல்படும் அம்மா உணவகங்கள் சுமார் 19 உணவகங்களை திமுக அரசு மூடி உள்ளது. வாய்பந்தல் போடாமல் மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன் புதிய உணவகங்களையும் திறக்க வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story