முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1 கோடியே 10 லட்சம்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1 கோடியே 10 லட்சம்
X

 சுப்பிரமணியசுவாமி கோவில் 

திருத்தணி, முருகன் கோயிலில் கடந்த 18 நாட்களில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 70ஆயிரத்து, 532 ரூபாய் ரொக்கம் மற்றும் 332 கிராம் தங்கம், 11.615 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியாத கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 5 ம் படை வீடாகத் திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், லாரி, பேருந்துகள் மூலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.

இதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்நிலையில் ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் எண்ணும் பணி புதன்கிழமை காலை தேவர் மண்டபத்தில் நடந்தது.

இதனை முருகன் கோயில் இணை ஆணையர் க. ரமணி, அறங்காவலர்கள் கோ. மோகனன், வி. சுரேஷ்பாபு, மு.நாகன், உஷாரவி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அலுவலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உண்டியல் காணிக்கை எண்ணினர்.

இதில் கடந்த 18 நாட்களில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 70ஆயிரத்து, 532 ரூபாய் ரொக்கம் மற்றும் 332 கிராம் தங்கம், 11.615 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியாத கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Tags

Next Story