ஈபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க தயாரா?: ஓபிஎஸ்

ஈபிஎஸ்-ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க தயாரா?: ஓபிஎஸ்
X

Ops

அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என முன்னாள் முதலவர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் நான் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. அதிமுகவை ஒன்றிணைக்க முழு ஒத்துழைப்பு தருவேன். அதிமுக ஒன்றிணைய வேண்டும், அதற்கு செங்கோட்டையன் எடுத்துள்ள முயற்சி, வெற்றி பெற வேண்டும். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை... பொறுத்திருந்து பாருங்கள். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என யார் எந்த முயற்சி எடுத்தாலும் ஆதரிப்பேன். ஈபிஎஸ் உடனான பிரச்சனை குறித்து டிடிவி தினகரனிடம் கேளுங்கள், என்னிடம் கேட்காதீர்கள். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேபாளராக ஏற்கக்கூடாடு என்பது நல்ல கருத்துதான் செங்கோட்டையனிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். சில பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச வேண்டியுள்ளது” என்றார்.

Next Story