மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுகவினரின் ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்:

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுகவினரின் ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்:
X
மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுகவினரின் ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்:

அ​தி​முக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​ததும், திமுக​வினர் புரிந்த ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சேலம் மாவட்​டம் கெஜல்​நாயக்​கன்​பட்​டி​யில் நேற்று நடை​பெற்​றப் பொதுக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் ஸ்டா​லின் ஆட்சி நடக்​கலாம். ஆனால், சேலம் மாவட்​டத்​தில் அதி​முக ஆட்​சி​தான் நடக்​கிறது.

அதி​முக கொண்டு வந்த திட்​டங்​களை மட்​டுமே செயல்​படுத்​தும் திமுக ஆட்சி தேவை இல்லை என்று மக்​கள் முடிவு செய்​து​விட்​டார்​கள். தேர்​தல் நெருங்​கும் நேரத்​தில் புதிய திட்​டங்​களை அறி​வித்து மக்​களை ஏமாற்​றப் பார்க்​கிறார் முதல்​வர் ஸ்டா​லின்.

லஞ்​சம், ஊழல் செய்​வ​தில்​தான் திமுக சிறந்த ஆட்​சி​யாக இருக்​கிறது. சிறுமிகள், பெண்​களுக்கு பாது​காப்பு கிடை​யாது. சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. ஸ்டா​லினின் குடும்​பத்தை மீறி, வேறு யாரும் திமுக​வில் பதவிக்கு வரமுடி​யாது. கடந்த தேர்​தலின்​போது திமுக அளித்த வாக்​குறு​தி​களில் பெரும்​பான்​மை​யான வாக்​குறு​தி​களை நிறைவேற்​ற​வில்​லை.

பட்டியலிட முடியுமா? - அதி​முக ஆட்​சி​யில் நாங்​கள் என்ன செய்​தோம் என்று முதல்​வர் ஸ்டா​லின் கேள்வி எழுப்​பு​கிறார். திமுக ஆட்​சி​யில் செய்த திட்​டங்​களை அவரால் பட்​டியலிட முடி​யு​மா? அதி​முக ஆட்​சி​யில் செயல்​படுத்​திய பல திட்​டங்​களை முடக்​கி​விட்​டார்​கள். அதி​முக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​ததும் அனைத்து திட்​டங்​களும் மீண்​டும் செயல்​படுத்​தப்​படும். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது திமுக-வுடன் காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில் இருக்​குமா என்​பதே சந்​தேகம்​தான்.

தற்​போது ஊழலில் ஈடு​பட்டு வரும் திமுக​வினர் மீது, அடுத்து மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வந்​ததும் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும். சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களும், திமுக​வினரும் கைது செய்​யப்​படு​வார்​கள்.

எனவே, வரும் தேர்​தலில் அதி​முக பெரும்​பான்மை இடங்​களைப் பிடித்​து, அனைத்து துறை​களி​லும் தமிழகம் வளர்ச்சி பெற அதி​முக​வுக்கு வாக்​களி​யுங்​கள். இவ்​வாறு பழனி​சாமி பேசி​னார். கூட்​டத்​தில், அதி​முக மாவட்​டச் செய​லா​ளர் இளங்​கோவன், வீர​பாண்டி தொகுதி எம்​எல்ஏ ராஜா, முன்​னாள் அமைச்​சர்​கள்​ செம்​மலை, தங்​கமணி உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

Next Story