ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு
X

bjp

திருவள்ளூர் மாவட்டம், மாத்தூரை சேர்ந்தவர் வக்கீல் சிவா (38). இவரை தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதால், சிவாவை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சம்பவ செந்தில், வக்கீல் சிவா மூலம் பணப் பரிவர்த்தனை செய்ததும், சம்பவ செந்திலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. பிறகு எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிவாவை பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். சிவா வீட்டிலிருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவாவுடன் சேர்த்து இதுவரை 5 வக்கீல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story