3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை கோரமங்களாவில் இளம்பெண் கொலை வழக்கு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

3 தனிப்படை அமைத்து கொலையாளிக்கு வலை கோரமங்களாவில் இளம்பெண் கொலை வழக்கு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
X

bihar

பீகார் மாநிலத்தை சேர்ந்த கிருத்தி குமாரி பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். வேறு விடுதியில் இருந்து அண்மையில் தான் இந்த விடுதிக்கு கிருத்தி குமாரி மாறி வந்திருக்கிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 11.10 மணியளவில் விடுதியின் 3வது மாடியில் கிருத்தி குமாரி தங்கியிருந்த அறை வாசலில் அவர் கொலை செய்யப்பட்டார். கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கிருத்தி குமாரி கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து இரவு 12 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Next Story