திருவண்ணாமலை கிரிவலம் சென்றால் கிடைக்கும் பலன்கள் !!

திருவண்ணாமலை கிரிவலம் சென்றால் கிடைக்கும் பலன்கள் !!
X

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலை கிரிவலம் சென்றால், பாவ வினைகள் குறைந்து புண்ணியங்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ அருணாச்சலேஸ்வரரின் அருள் கிடைத்து, மனதில் அமைதி, நிம்மதி ஏற்படும். திருவண்ணாமலை மலை சித்தர்கள் வாழ்ந்த இடமாக கருதப்படுவதால், அவர்களின் அருளும் கிடைக்க வாய்ப்புண்டு என்றும் கிரிவலம் செய்வதால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கிரிவலம் செய்வதால், நோய்கள் தீர்ந்து, உடல் நலம் மேம்படும். ஆரோக்கியம் பெருகும். கிரிவலம் செய்வதால் மன அழுத்தம், கவலைகள் குறைந்து, மனம் புத்துணர்ச்சி பெறும். கிரிவலம் செய்வதால் நடைப்பயிற்சி அதிகரிப்பதால், உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது.

கிரிவலம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம் ஏற்படும். கிரிவலம் செய்வதால் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கிரிவலம் செய்வதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து இருப்பார்கள். பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் கிரிவலம் செல்வது சிறந்தது.

Tags

Next Story