கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ்குமார் பணிநீக்கம்!!

கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ்குமார் பணிநீக்கம்!!
X

Gatekeeper

கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி, ரயில்வே கடவு பாதையை கடக்க முயன்றபோது பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த திருச்சி கோட்ட ரயில்வே துறை சார்பில் திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஸ்டேஷன் மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார். விபத்துக்கு பின் ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, கேட்டை மூடவில்லை என்று ஒப்புக்கொண்டது ரயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை அறிக்கையின்படி, பங்கஜ்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டடதாக ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Next Story