இரவு 11 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை மாறி மாறி பாலியல் வன்கொடுமை! அதிரவைக்கும் தகவல்!!

இரவு 11 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை மாறி மாறி பாலியல் வன்கொடுமை! அதிரவைக்கும் தகவல்!!
X
கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வெளியான திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவையில் தனியார் விடுதியில் தங்கி, உயர்கல்வி பயின்று வரும் 21 வயது கல்லூரி மாணவி, நேற்று முன் தினம்(02.11.2025) இரவு கோவை விமான நியைத்திற்கு பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பிருந்தாவன் நகர் பகுதியில் தனது ஆண் நண்பருடன் காருக்கு உள்ளே பேசிக் கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அங்கு ஆயுதங்களுடன் வந்து, காரை உடைத்து, ஆண் நண்பரை சரமாரியாக வெட்டி விட்டு, மாணவியை கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயத்துடன் மாணவியின் ஆண் நண்பர் உயிர் ஊசலாடிய நிலையில் காவல்துறையின் அவசரப் பிரிவுக்கு பேசி, காவல்துறையின் உதவியுடன் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து காவல் துறையினர் தேடியதில் அதிகாலை 4 மணிக்கு, கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மாணவியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இக்கொடூர செயலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் சுட்டுப்படித்த நிலையில், இவ்வழக்கில் வெளியான திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவையில் மாணவியை தூக்கிச் சென்று வன்கொடுமை செய்த காமுகர்கள், ஆடைகளின்றி இருந்த மாணவிக்கு சட்டையை கொடுத்து நகைத்திருட்டு என கூற வேண்டும் என மிரட்டி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவி திரும்பி வந்து பார்த்தபோது காரும் அங்கு இல்லாத சூழலில், அதன்பிறகு மாணவியை போலீசார் மீட்டுள்ளனர். கோவையில் கல்லூரி மாணவியை இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை சுமார் 3.30 மணி வரை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காரில் இருந்த இளம்பெண்ணை 300 மீ. தொலைவில் உள்ள மோட்டார் அறைக்கு தூக்கிச் சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. காதில் அணிந்திருந்த கம்மலை கழற்றிக் கொண்ட நிலையில், நகைத்திருட்டு என்று தான் கூற வேண்டும் என அந்த கும்பல், மிரட்டி அனுப்பியுள்ளனர். இளம்பெண்ணை காலை 4 மணிக்கு தான் மீட்டதாக காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறினார்.

Next Story