நாளை தொடக்கம் கோடை விழா மலர் கண்காட்சி - சுற்றுலா பயணிகளை வரவேற்கும் ஏற்காடு !!!

நாளை தொடக்கம் கோடை விழா மலர் கண்காட்சி - சுற்றுலா பயணிகளை வரவேற்கும் ஏற்காடு !!!
X

ஏற்காடு

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை தொடங்கி 26 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. தோட்டக்கலை துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு இயற்கை வளங்கள் மூலம் மின்சாரம் உருவாக்குவதை எடுத்துரைக்கும் வகையில் பிரம்மாண்ட காற்றாலை சுற்றுச்சூழலில் கடல்வாழ் உயிரினங்களின் பங்குகளை உணர்த்தும் வகையில் பவளப்பாறைகள், நண்டு, சிற்பி, ஆக்டோபஸ், நட்சத்திரம், கடல் குதிரை போன்ற உருவங்களும் குழந்தைகளிடம் மரம் நடுதலை ஊக்குவிக்கும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்களான டொனால்ட் டக் ,மிக்கி மௌஸ் டாம் அண்ட் ஜெர்ரி மரங்களை நடுவது போலவும் நீர்பாய்ச்சும் காட்சிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வண்ணமலர்கள் தொட்டிகளை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ணம் விளக்குகளால் அலங்கரித்திடவும் ஏரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண மலர்களால் ஆன செல்பி பாயிண்ட்களும் அமைக்கப்பட உள்ளன. அண்ணா பூங்காவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு பல்வேறு வடிவம் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்ணா பூங்காவில் ஏற்காட்டில் உள்ள காபி ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப சுவைத்து வாங்கி செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலா துறையின் சார்பில் ஏற்காடு படகு இல்லத்தில் நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான படகு போட்டியின் சமூக நலத்துறையின் சார்பில் 23ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கான அடுப்பில்லா சமையல் போட்டியும் விளையாட்டு துறையின் சார்பில் 23ஆம் தேதி அன்று மான்போர்ட் விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆண்களுக்கான கால்பந்து போட்டி பெண்களுக்கானபந்து விசும் போட்டி 50 மீட்டர் ஓட்டம், குண்டேறிதல் நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டி நடத்தப்பட உள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை நாய்கள் கண்காட்சியும் சமூக நலத்துறை 26ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை குழந்தைகளின் தளிர் நடைப்போட்டி நடத்தப்பட உள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொம்பு இசை, சிலம்பாட்டம், பறை இசை, மயிலாட்டம் ,பொய்க்கால் குதிரை, பரதநாட்டிய நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல்கள், கரகாட்டம் ஷோ ,கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

Tags

Next Story