அரசுப்பள்ளி மாணவிகளை விஜய்டிவி நீயா நானாவில் அள்ளி அனைத்த சக்தி மசாலா தம்பதியருக்கு குவியும் பாராட்டுகள்!!

Sakthi masala
விஜய் தொலைக்காட்சியில் எளிய குடும்பத்தில் இருந்து அதிக மதிப்பெண் பெற்ற 12 ஆம் வகுப்பு மாணவர்கள் vs பெற்றோர்கள் என்ற தலைப்பில் நீயா நானா விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சக்தி மசாலா நிறுவனத்தின் Dr.P.C.துரைசாமி மற்றும் Dr.சாந்தி துரைசாமி ஆகிய இருவரும் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் துரைசாமி, நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதில் மகிழ்ச்சி என்னவென்றால் அரசு பள்ளியில் தான் நான் 5 முதல் 11 ஆம் வகுப்பு வரை படித்தேன். 11 ஆம் வகுப்பு வரை காலில் செருப்பு அணிந்தது இல்லை. நானும் உங்களை போல இருந்து தான் வாழ்க்கையில் முன்னேறி இன்று தமிழகத்தின் பிரபலமான நிறுவனத்தை உருவாக்கியிருக்கின்றோம். இந்த சமூதாயத்தில் இருக்கும் வசதி படைத்தவர்கள் இதுப்போன்ற (அரசு பள்ளி மாணவர்கள்) குழந்தைகளுக்கெல்லாம் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் இந்த நிகழ்ச்சி விதைத்திருக்கின்றது என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய Dr.சாந்தி துரைசாமி, நான் வெறும் 6 ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எங்களுடைய தொழில்களில் ஈடுபட்டு நல்ல நிலைமைக்கு வரும் போது நாங்கள் இருவரும் யோசித்தது அரசு பள்ளியில் இருப்பவர்களுக்கும் சமூதாய சேவை செய்வதற்கும் சத்தியதேவி என்ற அரக்கட்டளையை 25 வருடங்களுக்கு முன்பு தொடங்கினோம். ஒவ்வொரு அரசு பள்ளி மாணவர்களின் முகத்திலும் என் கணவரின் முகத்தை பார்க்கிறேன். எத்தனை துரைசாமிகளும் எத்தனை தொழிலதிபர்களும் கலாம் போல எவ்வளவு அறிஞர்களும் மறைந்திருக்கிறார்கள். நான் 6 வகுப்பு படித்துள்ளேன். ஆனால் படித்த போது வெள்ளை நிற உடை, தொப்பி மற்றும் அழகான சிரிப்புடன் தேவதை என்பார்கள். செவிலியர் ஆக வேண்டும் என்பது எனது கனவு. எங்கள் வீட்டருகில் ஒரு நர்சிங் மருத்துவமனை மற்றும் கல்லூரி இருந்தது. கள்ளக்குறிச்சியில் இருந்து வந்து 490 மதிப்பெண்கள் எடுத்து கல்லூரி (B.Sc. Nursing) படிக்க வேண்டும் என்று கூறினார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது நான் எனது கணவரிடம் அனுமதி பெற்று அந்த கள்ளக்குறிச்சி பெண்ணுக்காக சீட் கேட்டுவிட்டேன். அவர் தயார் என்றால் எங்கள் ஊரில் இருக்கும் கிட்டத்தட்ட 40 வருடங்கள் பழக்கமானவர்கள் கல்லூரியில் B.Sc. Nursing சீட் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அதற்கான செலவை எங்கள் அறக்கட்டளை ஏற்கும்.
அதேபோல் ஜவ்வாது மலையில் இருந்து வந்து படிக்கும் அந்த மாணவியும் எந்த கல்லூரியில் சேர விரும்புகிறாரோ அதற்கு உண்டான தொகையை கொடுக்க கொடுத்துவிடுகிறோம். ஏற்கனவே தாளவாடி உள்ளிட்ட பள்ளிகளில் 20 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர்களுக்கான தொகை என செய்து வருகிறோம். இதையெல்லாம் செய்வதற்கு காரணம் எனக்கு கிடைக்காத படிப்பு பலருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் தான். நாங்கள் செய்யும் தொழிலும் எங்களை சார்ந்திருப்பவர்களும் தொழிலாள சகோதர சகோதரிகளும் எல்லாம் தான் இதற்கு காரணம். இப்படியொரு நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி என்று தெரிவித்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவ மாணவியருக்கும் இலவச லேப்டாப் வாழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.